தமிழ் பேசும் அனைத்து நல்உள்ளத்திற்கும்
அன்பு வணக்கங்கள் 🙏🏻
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழ் எழுத்துக்கள்
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன.
அதில் 12 உயிர் எழுத்துக்கள் ,
18 மெய் எழுத்துக்கள்,
216 உயிர்மெய் எழுத்துக்களும், மற்றும்
1 ஆயுத எழுதும் அடங்கும்.
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் இரண்டு வகைப்படும்.
• முதல் எழுத்து
• சார்பு எழுத்து
• முதல் எழுத்து
முதல் எழுத்து என்பது மொழிக்கு முதலாகவும், பிற எழுத்துக்கள் உருவாவதற்கும், ஒலிக்கவும் காரணமாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள் எனப்படும். அதாவது பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் , பதினெட்டு மெய் எழுத்துகள் ஆகிய 30-ம் சேர்ந்தது முதல் எழுத்துக்களாகும்.
1. உயிர் எழுத்துக்கள்
தமிழில் இருக்கக்கூடிய அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய பன்னிரண்டு எழுத்துகளும் உயிரெழுத்துக்கள் ஆகும்.
இவை இயல்பாகவும், எளிமையாகவும் ஒலிக்கக்கூடியன.
இதற்கு ஆவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆவி என்பதற்கு உயிர் என்று பொருள்படும்.
2. மெய் எழுத்துக்கள்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டு எழுத்துக்களும் மெய் எழுத்துகள் ஆகும்.
இந்த எழுத்துக்களை உச்சரிப்பது சற்று கடினம். உயிர் இல்லாமல் உடல் இருக்காததை போல மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே இயங்கும். மே என்றல் உடம்பு என்று பொருள்.
இதனை ஒற்று எழுத்துகள் என்றும், புள்ளி இட்டு எழுதுவதனால் புள்ளி எழுத்து என்றும் அழைப்பார்கள்.
• சார்பு எழுத்து
முதல் எழுத்துக்களை சார்ந்து வரக்கூடியவை சார்பு எழுத்து எனப்படும். உயிர்மெய் மற்றும் ஆய்த எழுத்துக்கள் சார்பு எழுத்துகள் ஆகும்.
1. உயிர்மெய் எழுத்து
உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து ஒலிப்பதனால் உயிர்மெய் எழுத்துகள் பிறக்கின்றன.
மேற்கூறிய எழுத்துகள் உயிர் எழுத்துகளின் ஒலியும் மற்றும் மெய் எழுத்துகளின் ஒலியும் சேர்ந்து உருவானதால் இதற்கு உயிர்மெய் எழுத்து என்று பெயர்.
எ.கா : க் + இ = கி
2. ஆய்த எழுத்து
ஃ இந்த எழுத்தை ஆய்த எழுத்து என்று அழைப்பர்.
வல்லினம்
க,ச,ட,த,ப,ற என்ற வல்லின எழுத்துக்கள்ஆறும் மார்பினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. நாம் இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது மார்பக பகுதியில் இருந்து எழும்
மெல்லினம்
ங,ஞ,ண,ந,ம,ன என்ற மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. நாம் இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது மூக்கு பகுதியில் இருந்து எழும்.
இடையினம்
ய, ர, ல, வ, ழ, ள என்ற இடையின எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. நாம் இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது கழுத்து பகுதியில் இருந்து எழும்.
த - வல்லினம்
மி - மெல்லினம்
ழ் - இடையினம்
தமிழ் எழுத்துக்கள் - ஆங்கில உச்சரிப்புடன் கூடிய அட்டைவனை
தமிழ் எண்கள்
தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும்.
இவை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் கிரந்த எழுத்து முறை ஆகும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப்போல் தமிழில் சுழியம் கிடையாது.
தமிழ் எண்கள் தற்போது பெருவழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்திய-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் எண்கள், இந்திய-அரேபிய எண்கள் இரண்டையும் பயன்படுத்தும் ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்)
தமிழ்த்தாய் கோயில்
தமிழ்த்தாய் கோயில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது.
இக்கோயிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.
தமிழ்த்தாய்க் கோயில் வடக்கு நோக்கியவாறு கம்பன் மணி மண்டபத்தின் வலப்புறம் அமைந்துள்ளது.
மும்முனை நிலத்தில் ஆறு பட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோயிலாக அமைந்து காணப்படுகிறது.
தமிழ்த்தாய்க் கோயிலின் பரிவார தெய்வங்களாக, வடகீழ்க் கோடியில் வள்ளுவரும், தென்கோடியில் இளங்கோவடிகளும், வடமேல்கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர்.
தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக நிறுவப் பெற்றிருக்கின்றனர்.
கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் விளங்குகின்றனர்.
தமிழ்த்தாயின் திருவுருவம்
கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள்.
வல முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உருத்திராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன.
சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன.
திருக்குறள் ஓர் உலகப்போதுமறை
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூலானது உலக புகழ்பெற்ற தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திருக்குறளானது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை நூலாகவும் இருக்கிறது.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.
திருக்குறள் சங்க இலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கின்றது.
திருக்குறள் திருவள்ளுவரின் சுய சிந்தனை திறனால் எழுதப்பட்டது.
1812 ஆம் ஆண்டு திருக்குறள் நூலானது முதல் முதலாக அச்சிடப்பட்டது. அதன் பிறகு இதன் அருமை பெருமை காரணமாக உலகறிய வைக்க ஆங்கிலத்தில் 1840-ஆண்டு அச்சிடப்பட்டது.
திருக்குறளுக்கு உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், பொதுமறை, முப்பால், தமிழ்மறை, ஈரடிநூல், வானம்மறை, உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து, முப்பால் என்று பல சிறப்பு பெயர்கள் உள்ளன.
தொல்காப்பியம் கூறும் பரிணாமக் கோட்பாடு
தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். இது, தமிழில் கிடைத்த இலக்கண நூல்களுள் முதலாவதாகவும், முதன்மையானதாகவும் திகழ்கிறது.
தொல்காப்பியத்திற்கு முன்பே பல நூல்கள் தோன்றியிருப்பினும் அவையாவும் நமக்குக் கிடைக்கவில்லை.
தமிழில் நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய இலக்கண நூல்களான நன்னூல், இலக்கண விளக்கம், நேமிநாதம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை,நம்பியகப்பொருள் போன்ற அனைத்து நூல்களுக்கும் தாய் நூல் தொல்காப்பியமே.
தொல்காப்பியம் தமிழின் இலக்கணத்தைச் சொல்வதோடு தமிழரின் வாழ்க்கை முறைகளையும் உலகிற்கு உணர்த்தும் ஒப்பற்ற நூலாகத் திகழ்கிறது. பண்டைத் தமிழர் நாகரிகத்தை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டு விழுமியங்களைத் தெரிந்துகொள்ள தொல்காப்பியமே முதல் ஆதாரமாகும்.
டார்வின் பரிணாமக் கோட்பாடு தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது...
மரங்களுக்கும் உயிர் இருப்பதை சொன்ன தமிழ் சங்க இலக்கியங்கள்
சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ (IEEE) அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.
ஆனால் அவர் கண்டறிவதற்கு முன்பே தமிழில் உள்ள சங்க இலக்கியத்தில் உள்ள சில நூல்களில் இதனை பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்று இருந்தன .
அவற்றை பற்றி இங்கு காண்போம்.
பெரு வெடிப்புக் கோட்பாடும் பரிபாடலும்
பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே.
பெருவெடிப்புக் கோட்பாட்டை நவீன விஞ்ஞானிகள் முன்மொழிவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் முன்மொழிந்தனர்.
கிமு 300க்கும் கி.பி 200க்கும் இடைப்பட்ட காலத்தில் கீரந்தையார் எழுதிய தமிழ் உரையான பரிபாடலில் பெருவெடிப்புக் கோட்பாடு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றை விரிவாக இங்கு காண்போம்.
சங்ககாலத்தில் சிசேரியன்
கொங்கு மண்டல சதகம் என்பது கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடிய சதகம். சதகம் என்பது நூறு செய்யுட்களாற் பாடுவது.
"விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப"
என்பது இலக்கண விளக்கப்பாட்டியல் - 86.
சதகம் பல பொருள் பற்றிப் பாடப்பெறும். இது வரலாறு பற்றிப் பாடப்பெறும் சதகவகையைச் சார்ந்தது.
" வயிற்றைப் பீறி, குழந்தையை எடுத்த மருத்துவி! " (கொங்குமண்டல சதகம் பாடல் 92) கொங்கு நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது.
அரசனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அதனை கண்ட நறையூர் நாட்டு மருத்துவச்சி ஒருவள் மயக்க மருந்து செலுத்தி தன் மருத்துவ அறிவால் அந்த பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை சாதுரியமாக வெளியில் எடுத்து தாயையும் சேயையும் காப்பாற்றுகிறாள்...
மனித குரோமோசோம் பற்றி திருமூலர்
திருமூலரின் பாடல்களில் அறிவியல் கருத்துகள் பல உள்ளன.
மனித உயிர், கருவில் தோன்றுகிறது.
இதற்குக் குரோமோசோம்கள் காரணம் என்று இன்றைய அறிவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. இந்தக் குரோமோசோம்கள் ஆணின் விந்திலும் உள்ளது; பெண்ணிடமும் உள்ளது. இவற்றில் ஒன்று இணையும்போது கரு தோன்றுகிறது.
இந்த அறிவியல் நுட்பத்தைத் திருமூலர் உணர்ந்திருந்தார். அவர் குரோமோசோம் என்ற சொல்லைக் கூறவில்லை. ஆனால், அவற்றின் செயற்பாட்டை குறிப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
Contact Us
மேலும் தகவல்களை பெற தமிழ் அறிவோம் இணையத்தில் உறுப்பினராகுங்கள்.